» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது

செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:05:01 AM (IST)

தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி மறவன் மடம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் தங்கராஜ் (70). இவர் நேற்று இரவு 8 மணியளவில் தூத்துக்குடி - பாளை., மெயின் ரோட்டை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த அய்யசாமி மகன் முத்துகுமார் (42), என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital








Thoothukudi Business Directory