» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)



விளாத்திகுளம் அருகே அரியநாய கிபுரம் உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் 85 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரம் உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.85-லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் 4- வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். 

நிகழ்வில் கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ், துணை ஆய்வாளர் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியை கனி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,  மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ், ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மருதக்கனி, சுப்பிரமனியன், சுமதி இம்மானுவேல், செந்தூர்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் ஜாகிர் உசேன், கிழக்கு ஒன்றிய பொருளாளர் முனியசாமி, உட்பட கழக நிர்வாகிகள் ஆசிரிய-ஆசிரியைகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital




Thoothukudi Business Directory