» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி உட்பட 3பேரை மண்வெட்டியால் தாக்கி கொல்ல முயன்றவர் கைது!

திங்கள் 18, செப்டம்பர் 2023 11:19:36 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே குடும்பத் தகராறில் மனைவி, மாமியார் உட்பட 3பேரை மண்வெட்டியால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அடைக்கலாபுரம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் மனைவி மங்களகனி (45). இவரது கணவர் 22 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதையடுத்து மீனாட்சிபட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் முருகேசன் (45) என்பவருடன் கடந்த 15ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்துள்ளார். 

இந்நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மங்களகனி தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இந்நிலையில் நேற்று காலை முருகேசன் அவரை அழைக்கச் சென்றுள்ளார். அப்போது மங்களகனி வர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த முருகேசன் மண்வெட்டியால் அவரை தாக்கியுள்ளார். 

இதனை தடுக்க முயன்ற மங்களகனியின் தாயார்  ஞானம்மாள் (65), மகன் ஜேக்கப் (24) ஆகியோரையும் முருகேசன் மண்வெட்டியால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த மூவரும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர்   அன்னராஜ் கொலைமுயற்சி வழக்குப்பதிந்து  முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory