» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் வரும் பயணிகளின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கே.வி.கே நகர் கீழ்ப்பகுதியில் இரண்டு சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி. கீதாஜீவன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேலூர் ரயில் நிலையத்தை இன்று பார்வையிட்டார். அந்த ரயில் நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் செல்வதற்காக ரயில் நிலையத்தின் தென்பகுதியில் இருந்து பயணிகள் இறங்குவதற்கு வசதியாக புதிய படிக்கட்டுகள் அமைக்கவும், பொதுமக்கள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதற்கு வசதியாக கே.வி.கே நகர் பகுதியில் கிழமேல் மற்றும் தென் வடல் சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
ஆய்வின் போது, ரயில் தென்னக ரயில்வே துணை திட்ட பொது மேலாளர் சரவணன், தூத்துக்குடி ரயில்வே மேலாளர், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசே கரன் உட்பட பலர் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மேயருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:23:02 PM (IST)

சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை சார்பில் இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளி 29, செப்டம்பர் 2023 9:16:24 PM (IST)

பெண் குழந்தைகளைக் காப்போம் பயிலரங்கம் : எஸ்பி துவக்கி வைத்தார்!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:37:35 PM (IST)

தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி தொடங்க வேண்டும்: அமைச்சர் கீதாஜீவன் கோரிக்கை
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:29:00 PM (IST)

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:24:58 PM (IST)

அரியநாயகிபுரம் பள்ளியில் புதிய வகுப்பறைகள் அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 8:20:28 PM (IST)
