» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 420 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு!

புதன் 31, மே 2023 11:54:31 AM (IST)

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இதில் 5 அலகுகளில் நாள்தோறும் தலா ஒரு அலகில் 210 என மொத்தம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று 3 ஆவது அலகு கொதிகலன் பழுது காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த பழுதை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 5 ஆவது அலகு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.  இதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழுதுகள் விரைவில் சரிசெய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து

Citizenமே 31, 2023 - 12:01:22 PM | Posted IP 162.1*****

13 உயிர்கள் போனது காணாத இதே போல் நற்செயல்கள் செய்து மீண்டும் என் மக்களை ஏமாற்றி மறுபடியும் பேரழிவு செய்ய போகிறாயா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory