» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பழக்கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
வெள்ளி 26, மே 2023 7:42:23 AM (IST)
தட்டார்மடத்தில் பழக்கடையில் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் ரஸ்தா தெருவை சேர்ந்தவர் மரிய சார்லஸ் (50). இவர் சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டுவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.2 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மரிய சார்லஸ் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினராஜ் விசாரணை நடத்தியதில், பாளையங்கோட்டை கோட்டூரை சேர்ந்த இசக்கி மகன் கார்த்தீசன் (22) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
புதன் 31, மே 2023 3:36:55 PM (IST)

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
புதன் 31, மே 2023 12:23:09 PM (IST)

திருட்டுமே 26, 2023 - 03:22:21 PM | Posted IP 162.1*****