» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி அலட்சியத்தால் வியாபாரி பலி: நிவாரணம் வழங்க கோரிக்கை!
வியாழன் 25, மே 2023 9:46:15 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த வியாபாரியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த இரும்பு கிரிலில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்திருக்கிறது. இதை அறியாமல் அதில் சாய்ந்த ஜெயகணேசன் அந்த இடத்திலேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அண்ணா சிலையை சுற்றிலும் இரும்பு கிரில்லில் இரவில் ஒளிரக்கூடிய 4 ஹாலாஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த விளக்கு பொருத்தப்பட்டுள்ள இடத்தின் மின்சார வயர்களை உரிய முறையில் பராமரிக்காமல் இருந்ததினால்தான் இரும்பு வேலி முழுவதும் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சியின் இந்த அலட்சிய போக்கினால் அன்றாடம் உழைத்து சாப்பிடும் ஒரு அப்பாவி கீரை வியாபாரியின் உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது. கடும் வெயில் நேரத்தில் இந்த நிலை என்றால், இன்னும் மழை காலங்களில் எந்தெந்த இடங்களில் என்னென்ன நிலையோ? இறந்து போன ஜெயகணேசனுக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அந்த குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மாநகராட்சியில் ஜெயகணேசன் மனைவிக்கு வேலையும் வழங்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேலூர் ரயில் நிலையத்தின் அருகில் புதியசாலை: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
புதன் 31, மே 2023 12:23:09 PM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் துறைமுக ஊழியர் பலி!
புதன் 31, மே 2023 12:14:45 PM (IST)

ரஜினி யாருக்கும் ஆதரவளிக்க வாய்ப்பில்லை : சத்யநாராயண ராவ் பேட்டி!
புதன் 31, மே 2023 12:04:31 PM (IST)
