» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை!
வியாழன் 23, மார்ச் 2023 10:30:38 AM (IST)
தூத்துக்குடியில் மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி புதிய துறைமுகம் சுனாமி காலனியைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் நாகராஜ் (34). கூலித் தொழிலாளி, இவர் தினசரி மது குடித்துவிட்டு வருவாராம். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் வேதனை அடைந்த நாகராஜ் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.