» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் டிரைவரை தாக்கி பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது
புதன் 22, மார்ச் 2023 3:01:56 PM (IST)
தூத்துக்குடியில் டிரைவரை அரிவாளால் தாக்கி ரூ.35ஆயிரம் பணம் பறித்த வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர் குருசாமி (50). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி சென்றார். இரவில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் அருகே வந்தபோது, 4பேர் அவரை மறித்து பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே அரிவாளால் அவரை வெட்டிவிட்டு அவரிடம் இருந்த ரூ.35 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்றுவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த குருசாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி திரு.வி.க.நகரை சேர்ந்த பரத் விக்னேஷ் (22), மகராஜா (22) ஆகிய 2பேரை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
புதன் 31, மே 2023 3:36:55 PM (IST)

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

கிணற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!
புதன் 31, மே 2023 12:23:09 PM (IST)

ஆண்டMar 22, 2023 - 08:51:38 PM | Posted IP 162.1*****