» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளம் அருகே புதிய சமுதாய நலக்கூடம் - எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

ஞாயிறு 19, மார்ச் 2023 12:18:03 PM (IST)



விளாத்திகுளம் அருகே மேலவெங்கடேசபுரம் கிராமத்தில் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியம், மேல வெங்கடேசபுரம் கிராமத்தில் ராம்கோ நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தையும், ரூ.9.15 லட்சம் கிராம கண்மாயில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள படித்துறை யையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ராம்கோ நிறுவனத்தின் துணை பொது மேலாளர்கள் சரவணன், ராமச்சந்திரன், மூத்த பொது மேலாளர் தங்கராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி முருகேசன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் அய்யாதுரை, மாவட்ட கவுன்சிலர் ஞான குருசாமி, கிளை செயலாளர் கனகராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory