» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளம் அருகே புதிய சமுதாய நலக்கூடம் - எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
ஞாயிறு 19, மார்ச் 2023 12:18:03 PM (IST)

விளாத்திகுளம் அருகே மேலவெங்கடேசபுரம் கிராமத்தில் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியம், மேல வெங்கடேசபுரம் கிராமத்தில் ராம்கோ நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தையும், ரூ.9.15 லட்சம் கிராம கண்மாயில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள படித்துறை யையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ராம்கோ நிறுவனத்தின் துணை பொது மேலாளர்கள் சரவணன், ராமச்சந்திரன், மூத்த பொது மேலாளர் தங்கராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி முருகேசன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் அய்யாதுரை, மாவட்ட கவுன்சிலர் ஞான குருசாமி, கிளை செயலாளர் கனகராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் லாரி செட் உரிமையாளர் அடித்துக்கொலை- போலீசார் விசாரணை
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 12:28:08 PM (IST)

மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் நூல் வெளியீட்டு விழா
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:50:58 AM (IST)

தூத்துக்குடியில் பில்டிங் காண்ட்ராக்டர் கார் திருட்டு: வாலிபர் கைது
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:42:03 AM (IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:24:00 AM (IST)

தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறு பவனி : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:54:15 AM (IST)

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:39:50 AM (IST)
