» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவியுடன் குடும்ப பிரச்சனை: கணவர் விஷம் குடித்து தற்கொலை!
புதன் 8, பிப்ரவரி 2023 10:17:14 AM (IST)
விளாத்திகுளம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மந்திகுளம் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஞானமணி மகன் மாசானம் (29). இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மாசானம் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரசோலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
so sadFeb 8, 2023 - 10:41:53 AM | Posted IP 162.1*****