» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுபான்மையினருக்கு கடனுதவி: ஆட்சியர் தகவல்!

புதன் 1, பிப்ரவரி 2023 12:21:28 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தனிநபர்கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறு வணிகக் கடன், கல்விக்கடன் 30லட்சம் வரை குறைந்த வட்டி விகிதத்தில் 3% முதல் 8% வரை கூட்டுறவு வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றது.

தகுதிகள்: கடன்தொகை பெற விண்ணப்பதாரர் 18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.98,000 மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,20,000 க்கு மிகாமலும், 30 இலட்சம் வரை கோருபவர்கள் ஆண்டு வருமானம் ரூ.6,00,000 மிகாமலும் இருத்தல் வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: சாதிச்சான்றிதழ் நகல், வருமானச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் (கல்விக் கடனாயின்), முன்னணியில் உள்ள நிறுவனமொன்றிலிருந்து விலைப்புள்ளி மற்றும் திட்டதொழில் அறிக்கை ரூபாய் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டிருப்பின்)

பிணையம்: கடன் தொகை ரூ.50,000 வரை கோரும் பட்சத்தில் ஒரு நபர் ஜாமீனும் ரூ.50,000 க்கு மேல் இரு நபர் ஜாமீனும் வழங்குதல் வேண்டும். கடன்தொகை ரூ.1,00,000 வரை கோரும் பட்சத்தில், மனுதாரர் சுய உத்தரவாதம் மற்றும் பின் தேதியிட்ட வங்கி காசோலை சமர்ப்பிக்கப்பட வேண்டும். கடன் தொகை ரூ.1 இலட்சத்திலிருந்து ரூ.5,00,000 வரை கோரும் பட்சத்தில், அரசு ஊழியர்/பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகள் (அ) வருமான வரி செலுத்தும் ஒருவரின் பின் தேதியிட்ட வங்கி காசோலை சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

ரூ.5,00,000 ற்கு மேல் கடன்தொகை கோரும் பட்சத்தில் அரசு ஊழியர்/பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகள் (அ) வருமான வரி செலுத்தும் இருவரின் நிலம் சம்மந்தப்பட்ட அடமான ஆவணங்கள் / கடன் கோரும் தொகைக்கு சமமான அசையா சொத்துகளின் அடமானஆவணங்கள் மற்றும் பின் தேதியிட்ட வங்கி காசோலை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப்படிவத்தை கட்டணமின்றி பெற்று இத்திட்டத்தில் பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory