» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இளம்பெண்ணை கத்தியால் குத்திய தந்தை கைது!
புதன் 1, பிப்ரவரி 2023 10:24:24 AM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே குடும்ப பிரச்சனையில், இளம்பெண்ணை கத்தியால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பாஞ்சாலங்குறிச்சி, மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (53). இவரது மனைவி புவனேஷ்வரி (50). இந்த தம்பதியரின் மகள் நபிஷா (21). நேற்று தம்பதியர் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது நபிஷா தனது தாய்க்கு ஆதரவாக பேசினராம். இதில் ஆத்திரம் அடைந்த புஷ்பராஜ் மகளை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எபனேசர் வழக்குப் பதிந்து புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.