» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண்ணை கத்தியால் குத்திய தந்தை கைது!

புதன் 1, பிப்ரவரி 2023 10:24:24 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே குடும்ப பிரச்சனையில், இளம்பெண்ணை கத்தியால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பாஞ்சாலங்குறிச்சி, மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (53). இவரது மனைவி புவனேஷ்வரி (50). இந்த தம்பதியரின் மகள் நபிஷா (21). நேற்று தம்பதியர் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது நபிஷா தனது தாய்க்கு ஆதரவாக பேசினராம். இதில் ஆத்திரம் அடைந்த புஷ்பராஜ் மகளை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எபனேசர் வழக்குப் பதிந்து புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory