» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியருக்கு வெட்டு: 2பேர் கைது!
செவ்வாய் 31, ஜனவரி 2023 10:55:59 AM (IST)
தூத்துக்குடியில் டாஸ்மாக் விற்பனையாளரை அரிவாளால் வெட்டிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில், எப்சிஐ குடோன் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் தூத்துக்குடி காந்தி நகரை சேர்ந்த சிவதானு பாண்டியன் மகன் செல்வகுமார் (52) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் 2பேர் வந்து மதுபாட்டில் கேட்டுள்ளனர். விற்பனை நேரம் முடிந்து விட்டது என்று கூறியதால் அவர்கள் ஆத்திரத்தில் விற்பனையாளர் செல்வகுமாரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் காயம் அடைந்த செல்வகுமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தென்பாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கெங்கநாத பாண்டியன் வழக்குப்பதிந்து, கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் கோவில் ராஜ் (48), சித்திரவேல் மகன் துரை (31) ஆகிய இருவரையும் கைது செய்தார். இதனிடையே செல்வகுமார் கல்லால் தாக்கியதில் காயம் அடைந்த கோவில்ராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழன்Jan 31, 2023 - 12:26:03 PM | Posted IP 162.1*****