» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்த இளைஞா் கைது

செவ்வாய் 31, ஜனவரி 2023 8:01:47 AM (IST)

நாலாட்டின்புத்தூரில் போலீசாரை பணிசெய்யவிடாமல் தடுத்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூா் தலைமைக் காவலா் ஜெயபால் மற்றும் உதவி ஆய்வாளா் அங்குத்தாய் ஆகிய இருவரும் இரவு நாலாட்டின்புத்தூா் மேட்டுத் தெருவில் தம்பதியிடையே ஏற்பட்ட தகராறு குறித்து விசாரணை செய்து, சமாதானம் செய்ய சென்றிருந்தாா்களாம்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மேட்டுத்தெருவைச் சோ்ந்த ஆழ்வாா்சாமி மகன் வெள்ளைச்சாமி என்ற தினேஷ் மற்றும் மருதையா மகன் சங்கா் ஆகிய இருவரும் போலீசாரை அவதூறாகப் பேசினராம். அதையடுத்து, போலீசார் இருவரும் காவல் நிலையத்திற்கு திரும்பி வந்துவிட்டாா்களாம். 

இந்நிலையில், காவல் நிலையத்திற்கு வந்து தினேஷ், சங்கா் ஆகிய இருவரும், போலீசாரை அவதூறாகப் பேசி பணி செய்யவிடாமல் தடுத்தாா்களாம். இதுகுறித்து தலைமைக் காவலா் ஜெயபால் அளித்த புகாரின் பேரில், நாலாட்டின்புத்தூா் போலீசார் வழக்குப் பதிந்து, வெள்ளைச்சாமி என்ற தினேஷை (32) நேற்று கைது செய்தனா். சங்கரை தேடி வருகின்றனா்.


மக்கள் கருத்து

சபாஷ்Jan 31, 2023 - 09:04:01 AM | Posted IP 162.1*****

சரியான முடிவு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory