» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரவுடி கொலை வழக்கில் சிறுவன் உட்பட மேலும் 3 பேர் கைது

செவ்வாய் 31, ஜனவரி 2023 7:59:04 AM (IST)

தூத்துக்குடியில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி சங்கரப்பேரியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகன் கருப்பு என்ற கருப்பசாமி (27). இவர் கடந்த 28-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, கருப்பசாமி, உத்தண்டு ரமேஷ், அங்குசாமி மகன் உத்தண்டு, தெற்கு சங்கரப்பேரியை சேர்ந்த வீரபாண்டியன் என்ற ரவீந்திரன் (40), முத்துராஜ் என்ற ராசு (35), கோமதிபாய் காலனியை சேர்ந்த வேல்சாமி (24) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து கொலை வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சங்கரப்பேரியை சேர்ந்த சக்திவேல் (52), கருத்தப்பாண்டி (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். இதே போன்று அந்த பகுதியில் வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory