» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மாற்றம்: திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்

திங்கள் 30, ஜனவரி 2023 9:40:40 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ பணியிட மாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார். 

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ பணியிட மாற்றம் செய்யப்பட்டு, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும், திண்டுக்கல் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை திட்ட இயக்குனர் சி.தினேஷ்குமார் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 30-க்கு அதிகமான  ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன் நியமனம். தென்காசி ஆட்சியராக ரவிசந்திரன், விருதுநகர் ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேகப், விழுப்புரம்  ஆட்சியராக பழனி நியமனம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று கன்னியாகுமரி ஆட்சியராக ஸ்ரீதர், பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், தேனி ஆட்சியராக ஷாஜிவாணா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  கோவை ஆட்சியராக கிராந்திகுமார், திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.  விழுப்புரம் ஆட்சியராக இருந்த மோகன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


மக்கள் கருத்து

NameJan 31, 2023 - 11:15:02 AM | Posted IP 162.1*****

Rompa nalla visayam intha ladyala yenna use no action

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory