» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் நிறைவு : காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
திங்கள் 30, ஜனவரி 2023 12:36:00 PM (IST)
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவு விழாவையொட்டி தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கன்னியாகுமரியில் தொடங்கி சுமார் 5 மாதங்களாக நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணம் காஷ்மீரில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி தூத்துக்குடியில், காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே. பெருமாள்சாமி தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி முன்னிலை வகித்தார்.
இதில், வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, வர்த்தக பிரிவு மாநகரதலைவர் அருள்வளன் மாநகர் செயலாளர், இக்னேஷியஸ், டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், ஐஎன்டியூசி முனியசாமி, கலைப்பிரிவு தலைவர் பெத்துராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநகர பொது செயலாளர் நம்பி சங்கர், தெற்கு மண்டல பொது செயலாளர் தனசேகர், எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், வர்த்தக பிரிவு செயலாளர் நேரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இத்துடன்Jan 30, 2023 - 04:29:48 PM | Posted IP 162.1*****