» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கெட்டுப்போன உணவு பொருட்களை வைத்திருந்த உணவகத்திற்கு சீல் வைப்பு
திங்கள் 30, ஜனவரி 2023 7:55:24 AM (IST)
தூத்துக்குடியில் உணவுப் பொருள்களை நாய் அசுத்தப்படுத்தியதாக புகாரின்பேரில், உணவகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
தூத்துக்குடி ஜாா்ஜ் சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் இருந்த கோழிக்கறி உள்ளிட்டவற்றை நாய் அசுத்தப்படுத்தியதாக, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினருக்கு புகாா் வந்ததாம்.
அத்துறையின் மாவட்ட நியமன அலுவலா் மாரியப்பன் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் சிவக்குமாா் தலைமையிலான அலுவலா்கள் அந்த உணவகத்தில் சோதனை நடத்தி, 7 கிலோ பழைய கோழிக்கறி உள்ளிட்ட கெட்டுப்போன 15 கிலோ உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.
மேலும், சுகாதார குறைபாடு, கால்நடைகள் உள்ளே வரும் வகையில், சமையல் உபகரணங்களையும், உணவுப் பொருள்களையும் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக உணவகத்தின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, உணவகத்துக்கு ‘சீல்’ வைத்தனா்.
உணவகங்கள் சுகாதாரமான, பாதுகாப்பான உணவை வழங்கத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு குறைபாடு இருப்பது தெரியவந்தால் மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையா் அலுவலகத்துக்கு நுகா்வோா் 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் அளிக்கலாம். அவா்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் தெரிவித்தாா்.
தமிழ்Jan 30, 2023 - 10:35:48 AM | Posted IP 162.1*****