» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி மீது பைக் ஏற்றி கொல்ல முயன்ற கணவர் கைது
புதன் 25, ஜனவரி 2023 7:49:06 AM (IST)
நாலாட்டின்புத்தூர் அருகே மனைவி மீது மோட்டார் பைக் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக கணவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள விட்டிலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுப்பாராஜ் மகன் சந்திரமோகன் (39). டிரைவரான இவருக்கு ராதா (35) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சந்திரமோகன் - ராதா தம்பதியினர் தற்போது பிரிந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மகன்கள் இருவரும் தாய் ராதாவுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ராதா தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோாது, எதிரே மோட்டார் பைக்கில் வந்த சந்திரமோகன், மனைவி மீதுள்ள கோபத்தில் பைக்கை அவர் மீது ஏற்றியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராதா கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து சந்திரமோகனை கைது செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுபான்மையினருக்கு கடனுதவி: ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 12:21:28 PM (IST)

ஆடு திருடிய 3பேர் கைது : ஆட்டோ பறிமுதல்!
புதன் 1, பிப்ரவரி 2023 12:06:28 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
புதன் 1, பிப்ரவரி 2023 12:03:16 PM (IST)

பிசி, எம்பிசி மக்களுக்கு ரூ.15லட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 11:52:39 AM (IST)

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வாழ்த்து!
புதன் 1, பிப்ரவரி 2023 11:43:58 AM (IST)

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி பிறந்த நாள் விழா
புதன் 1, பிப்ரவரி 2023 11:02:00 AM (IST)
