» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வெளியூர் மீன்பிடி படகுகளை அனுமதிக்க கூடாது: எஸ்பியிடம் மீனவர்கள் மனு
செவ்வாய் 24, ஜனவரி 2023 8:15:39 AM (IST)
தருவைகுளத்தில் வெளியூர் மீன்பிடி படகுகளை அனுமதிக்க கூடாது என்று நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் எஸ்பியிடம் மனு அளித்தனர்..
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் புனித நீக்குலாசியார் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க செயலாளர் தொம்மை ராஜ், தருவைகுளம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் லூர்துராஜ் ஆகியோர் தலைமையில் மீனவர்கள் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணனிடம் அளித்த மனுவில், "தருவைகுளத்தில் 250 விசைப்படகுகளும், 150 சிறிய நாட்டுப்படகுகளும் உள்ளன. எங்கள் ஊரில் 200 மீட்டரில் சிறிய மீன்பிடி இறங்கு தளம் உள்ளது. இதனை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம்.
இந்த நிலையில் வெளியூர் படகுகள் தருவைகுளத்தில் மீன்களை இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்து உள்ளனர். இது எங்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் வெளியூர் படகுகள் தருவைகுளத்துக்கு வந்தால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். ஆகையால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களை கண்டித்து, பிரச்சினை இல்லாமல் எங்களை தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொட்டல்காடு புதிய பள்ளி கட்டிடடம் அடிக்கல் நாட்டு விழா
புதன் 1, பிப்ரவரி 2023 3:18:27 PM (IST)

ஒட்டுப்போடுவதில் கூட ஒழுங்கா போடவில்லை: ஓட்டுப் போட்ட மக்கள் வேதனை!
புதன் 1, பிப்ரவரி 2023 3:11:49 PM (IST)

சிறுபான்மையினருக்கு கடனுதவி: ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 12:21:28 PM (IST)

ஆடு திருடிய 3பேர் கைது : ஆட்டோ பறிமுதல்!
புதன் 1, பிப்ரவரி 2023 12:06:28 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
புதன் 1, பிப்ரவரி 2023 12:03:16 PM (IST)

பிசி, எம்பிசி மக்களுக்கு ரூ.15லட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 11:52:39 AM (IST)

பழையJan 24, 2023 - 12:25:08 PM | Posted IP 162.1*****