» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தோட்டத்தில் மின்மோட்டார்களை திருடியவர் கைது!
ஞாயிறு 4, டிசம்பர் 2022 7:15:58 PM (IST)
குலசேகரபட்டினம் பகுதியில் தோட்டத்தில் புகுந்து மின்மோட்டார்களை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சந்தையடியூரை சேர்ந்த பொன்னையா மகன் கோபாலகிருஷ்ணன் (58) என்பவருக்கு சொந்தமான குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டங்காடு சாலையில் உள்ள தோட்டத்தில் கடந்த 02.12.2022 அன்று மின் மோட்டார்கள் திருடுபோயுள்ளது. இதனையடுத்து கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் உடன்குடி செட்டியாபத்து முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சுடலை மகன் பட்டு கிருஷ்ணன் (29) என்பவர் தோட்டத்திலிருந்து மின் மோட்டார்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து குலசேகரபட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனியாண்டி வழக்கு பதிவு செய்து பட்டு கிருஷ்ணனை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.18,000/- மதிப்பிலான 2 மின் மோட்டார்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுபான்மையினருக்கு கடனுதவி: ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 12:21:28 PM (IST)

ஆடு திருடிய 3பேர் கைது : ஆட்டோ பறிமுதல்!
புதன் 1, பிப்ரவரி 2023 12:06:28 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
புதன் 1, பிப்ரவரி 2023 12:03:16 PM (IST)

பிசி, எம்பிசி மக்களுக்கு ரூ.15லட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 11:52:39 AM (IST)

ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் வாழ்த்து!
புதன் 1, பிப்ரவரி 2023 11:43:58 AM (IST)

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி பிறந்த நாள் விழா
புதன் 1, பிப்ரவரி 2023 11:02:00 AM (IST)
