» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபர் கைது!
சனி 3, டிசம்பர் 2022 11:38:49 AM (IST)
தூத்துக்குடியில் அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் விளாத்திகுளத்தில் இருந்து வந்த அரசு பேருந்து ஒன்று, அங்குள்ள மினி பஸ் நிறுத்துமிடத்தில் வந்தபோது அங்கு நின்ற ஒருவர் அரசு பஸ்சை நிறுத்தி கண்டக்டரான விளாத்திகுளம் அருகே வைப்பார் தல்லகுளத்தை சேர்ந்த கதிர்வேல் (36) என்பவரை சரமாரியாக அடித்து உதைத்து தாக்கினார். இதுதொடர்பான வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் கண்டக்டரை தாக்கியது மடத்தூர் முருகேசன் நகரை சேர்ந்த ரீகன் (33) என்பது தெரிய வந்தது. அவர் புதிய பஸ் நிலையத்தில் வரக்கூடிய அரசு பஸ்களை வலுக்கட்டாயமாக நிறுத்தி அதில் இருந்து வரக்கூடிய பயணிகளை மினி பஸ்களில் ஏற்றி விடும் வேலையை வழக்கமாக செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.