» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.2.18 கோடி மதிப்பில் கட்டிடப் பணிகள் துவக்கம்
வெள்ளி 2, டிசம்பர் 2022 4:03:18 PM (IST)
எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2.18 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வக கட்டிடங்கள் கட்டுமான பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீத கண்ணன் எட்டயபுரம் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், இளம்புவனம் ஊராட்சி மன்ற தலைவர், முத்துக்குமார் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் கதிர்வேல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஆழ்வார் உதயக்குமார், பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன், வார்டு செயலாளர்கள் பிச்சை, ராமர், சின்னப்பர், ராம்குமார், அருள்சுந்தர், முத்துராஜ், மயில்ராஜ், மகேஷ், வார்டு கவுன்சிலர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.