» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை!

வெள்ளி 2, டிசம்பர் 2022 3:23:06 PM (IST)



நாசரேத் பரி.யோவான் பேராலயத்தில் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நடைபெற்றது

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை பரி.யோவான் பேராலயத்தில் நடைபெற்றது. லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளர் மோகன்ராஜ் அருமைநாயகம், குருத்துவ செயலாளர் எம்.பி. இம்மானுவேல் வான்ஸ்றக், உப தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சபை மன்றங்களிலுள்ள அந்தந்த சேகர ஆண்கள்  கிறிஸ்துமஸ் சிறப்புபாடல்கள் பாடினர். 

தேவசெய்தி வழங்கப்பட்டது.  இதற்கான ஏற்பாடுகளை பேராயரும், பிரதமப் பேராயரின் ஆணையாளருமான தீமோத்தேயு ரவீந்தர் தலைமையில் நாசரேத் தூய யோவான் பேராலய குருவானவர்கள் ஏ.பொன் செல்வின் அசோக்குமார், டாக்டர் மர்காஷியஸ் டேவிட் வெஸ்லி, கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற தலைவர் க.ஐ. பா.வெல்ட்டன் ஜோசப், திருமண்டல ஆண்கள் ஐக்கிய சங்க இயக்குநர், செயலர் ஜெ.சி. ராபின்சன் ஆகியோர் செய்திருந்தனர். விழா நிறைவாக ஐக்கிய விருந்து பரிமாறப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory