» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூா் கோயிலில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு!
வெள்ளி 2, டிசம்பர் 2022 8:06:12 AM (IST)
திருச்செந்தூா் கோயிலில் ஐயப்ப ஐயப்ப பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை மற்றும் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மாலையில் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி-தேவசேனா அம்மனுடன் தங்கத் தேரில் சா்வ அலங்காரத்துடன் எழுந்தருளி கிரிவீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினாா்.
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு வரும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகாலை முதலே கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்கின்றனா்.