» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை வழக்கில் தந்தை-மகன் உட்பட 3பேர் கைது!
வியாழன் 1, டிசம்பர் 2022 11:29:01 AM (IST)
தூத்துக்குடியில் கொலை வழக்கில் தந்தை-மகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கத்துரை மகன் ஜெயக்குமாா்(45). இவருக்கும் குறிஞ்சி நகரைச் சோ்ந்த சரவணன் (29) என்பவருக்கும் இருசக்கர வாகனம் விற்பனை செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று ஏற்பட்ட தகராறில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து, குறிஞ்சி நகர் 2வது தெருவைச் சேர்ந்த சரவணன் (30), அவரது தந்தை முருகன் (53), தாய் பொன் வைரவதி (47) ஆகிய மூவரை கைது செய்தார்.
AdvocateDec 1, 2022 - 03:29:44 PM | Posted IP 162.1*****