» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உணவு டெலிவரி ஊழியரிடம் பைக், செல்போன் பறிப்பு
வியாழன் 1, டிசம்பர் 2022 11:22:04 AM (IST)
தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி மிரட்டி உணவு டெலிவரி ஊழியரிடம் செல்போன், பைக்கை பறித்துச் சென்ற 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி போல்டன் புரத்தைச் சேர்ந்தவர் சேசுராஜா மகன் ஜெனிஸ்டன் (20). இவர் தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அண்ணா நகர் 12 தெருவில் உணவு டெலிவரி கொடுக்க சென்றபோது 2பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், மற்றும் அவரது பைக்கை பறித்துச் சென்றுவிட்டார்களாம். இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.