» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவிலுக்குச் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 10:45:29 AM (IST)

குலசேகரபட்டினம் கோவிலுக்குச் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு மனைவி சரஸ்வதி (62). இவர் கடந்த வெள்ளிக்கிழமை குலசேகரபட்டினம்  முத்தாரம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த  7½ பவுன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்றுவிட்டாராம். 

இதுகுறித்து அவர் நேற்று குலசேகரபட்டினம்  காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory