» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவிலுக்குச் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு
வியாழன் 1, டிசம்பர் 2022 10:45:29 AM (IST)
குலசேகரபட்டினம் கோவிலுக்குச் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகே தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு மனைவி சரஸ்வதி (62). இவர் கடந்த வெள்ளிக்கிழமை குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்குச் சென்றுள்ளார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து அவர் நேற்று குலசேகரபட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.