» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2பேர் படுகொலை
புதன் 30, நவம்பர் 2022 7:42:36 PM (IST)
தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கத்துரை மகன் ஜெயக்குமாா்(45). இவருக்கும் குறிஞ்சி நகரைச் சோ்ந்த சரவணன் (29) என்பவருக்கும் இருசக்கர வாகனம் விற்பனை செய்வதில் இன்று மாலை தகராறு ஏற்பட்டதாம். இதில், ஆத்திரமடைந்த சரவணன், ஜெயக்குமாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெயக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம், சப் இன்ஸ்பெக்டர் சங்கர், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை ஏஎஸ்பி சந்திஸ் பார்வையிட்டார்.
மற்றொரு கொலை
தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் பெரியநாயகம் (60). எலக்ட்ரீசியன். இவா் பாரதிநகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் இன்று மாலை 5 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மா்ம கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
NameDec 1, 2022 - 01:54:45 AM | Posted IP 162.1*****
Evng railway gate la busya helmet pidichutu irunthangale
IndianDec 2, 2022 - 03:23:52 PM | Posted IP 162.1*****