» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் பாலியல் பலாத்காரம்: காதலனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

புதன் 30, நவம்பர் 2022 7:31:06 PM (IST)

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள நீராவிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வபெருமாள் மகன் அழகுராஜ் (32) இவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த  (17) இளம் பெண்ணை திருமண ஆசை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.  இதுகுறித்து புகாரின் பேரில் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி மாதவ ராமானுஜம் அழகுராஜுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.4000/-  அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எல்லம்மாள்  கிசிங்கர் ஆஜரானார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory