» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளம் பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள்
புதன் 30, நவம்பர் 2022 4:34:01 PM (IST)
விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்து உரையாற்றினார். மேலும் திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் 3000-மீ ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்ற ஓ.லட்சுமிநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த விளாத்திகுளம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி ராதிகாவுக்கு ஊக்கத்தொகை ரூ.20ஆயிரம் வழங்கினார்.
நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியை ரோஸ்லின்சாந்தி, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், கவுன்சிலர்கள் வேல்ஈஸ்வரி, அன்பில் நாராயண மூர்த்தி, குறிஞ்சி ராம்குமார், சுப்புராஜ், பிரியா முனியசாமி, வார்டு செயலாளர்கள் சங்கரலிங்கம், சுப்புராஜ், லெனின், அய்யனார், மாரிராஜ், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.