» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

புதன் 30, நவம்பர் 2022 4:08:56 PM (IST)

தூத்துக்குடியில் பெண்ணிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி திரேஸ்புரம் தெரசா காலனியைச் சேர்ந்த தாமஸ் மனைவி எல்சி (44) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இன்னாசி மகன் மரிய சிங்கம் (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 26.11.2022 அன்று எல்சி அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மரியசிங்கம், எல்சியிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து எல்சி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிவராஜா வழக்கு பதிவு செய்து எதிரி மரிய சிங்கத்தை கைது செய்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory