» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி: தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மீட்பு!
புதன் 30, நவம்பர் 2022 11:16:06 AM (IST)
தந்தை திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய அசாம் சிறுமி தூத்துக்குடி ரயில் நிலையத்தில மீட்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 7 மணி அளவில் தனியாக நடைமேடையில் சுற்றித்திரிந்த சிறுமியை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ராஜாராம் விசாரித்தபோது அச்சிறுமி அசாம் மாநிலம், கர்பி அங்கோலங் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி எனத் தெரியவந்தது.
அவர் அங்குள்ள பள்ளியில் படித்து வருவதாகவும், தன்னுடைய அப்பா திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறி ரயில் மூலம் தூத்துக்குடி வந்தததும் தெரியவந்தது. இதையடுத்து அச்சிறுமியை ரயில்வே குழந்தைகள் பாதுகாப்பு உதவி மைய ஒருங்கிணைப்பாளர் அன்பரசுவிடம் ஒப்படைத்தனர். மேலும் அச்சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.