» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கண்மாயில் மூழ்கி விவசாயி பரிதாப சாவு!

புதன் 30, நவம்பர் 2022 11:05:34 AM (IST)

விளாத்திகுளம் அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கத்தாளம்பட்டி பகுதியைச் சேர்ந்த கென்னடி (48). இவரது மனைவி அந்தோணியம்மாள் இருவரும் விவசாயம் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலும் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கென்னடி ஆடு மேய்த்து விட்டு அப்பகுதியில் உள்ள கண்மாயில் குளிக்கச்  சென்றவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளர்.

நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடிச் சென்றபோது அவர் கண்மாயில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியினர் அவரது உடலை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் காவல்துறையினர் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory