» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
புதன் 30, நவம்பர் 2022 8:28:09 AM (IST)
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணியைத் தவிர வேறு எந்தப் பணியையும் வழங்கக் கூடாது. பள்ளி இறுதித் தோ்வுகள் நெருங்கும் சமயத்தில் மண்டல ஆய்வுகளை நடத்தி கற்பித்தல் பணியை முடக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவா் குரூஸ் விக்பட் தலைமை வகித்தாா். இதில், மாவட்டச் செயலா் சிவகுமாா், புரவலா் ஜனகராஜ் உள்பட ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனர்.