» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மழைநீர் தேங்காத வகையில் தடைகளை அகற்ற மேயர் உத்தரவு

செவ்வாய் 29, நவம்பர் 2022 3:12:56 PM (IST)



தூத்துக்குடியில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்களில் நீரோட்டத்திற்கு இடையூறாக உள்ள தடைகளை அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை மேற்கொண்டார். 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வடிகால்களில் இருந்து வரும் கழிவுநீர், பக்கிள் ஓடையில் வந்து சேருகின்றது. இந்நிலையில் வடிகால்களில் இருந்து வரும் நீரோட்டத்திற்கு உள்ள தடைகளை அகற்றுவது குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நீரோட்டத்திற்கு இடையூறாக உள்ள தடைகளை அகற்றுவதற்கும் கரைகள் தூர்ந்த பகுதிகளை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். 

தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட பகுதியான எஸ்.கே.எஸ்.ஆர் காலனி மற்றும் கந்தசாமிபுரம் சந்திப்பு ஆகிய பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் நேரில் பார்வையிட்டார். கிருஷ்ணராஜபுரம் பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் மாற்றும் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். இதில் மேயரின் நேர்முக உதவி யாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் மாநகர கவுன்சிலர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory