» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாடியில் இருந்து தவறி விழுந்து பார் உரிமையாளர் சாவு

செவ்வாய் 29, நவம்பர் 2022 11:22:39 AM (IST)

கயத்தாறு அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த பார் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள சவலாபேரி கிராமம், கீழத் தெருவைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் மகன் மாடசாமி (36). இவர் வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் டாஸ்மாக் கடையில் பார் ஏலம் எடுத்து நடத்தி வந்தார். இந்நிலையில் மாடசாமி சம்பவத்தன்று வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவர், திடீரென்று நிலைதடுமாறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். 

அவரை குடும்பத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மதுரையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் (பொ) விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன மாடசாமிக்கு லெட்சுமி(30) என்ற மனைவியும், பிரதீப்(6) என்ற மகனும் உள்ளனர். 



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory