» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கால்வாய் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
செவ்வாய் 29, நவம்பர் 2022 10:52:43 AM (IST)
தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், லெவிஞ்சிபுரம் முதல் தெரு, 2வது தெரு, பிரையண்ட் நகர் பகுதிகளில் நடைபெற்ற வரும் கழிவுநீர் கால்வாய் பணியினை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர் சுரேஷ் பிரதிநிதிகள் ரஜினிமுருகன், முத்து, சதிஷ்குமார், முருகன், நடராஜன், மற்றும் அல்பட், மணி, உள்பட பலர் சென்றனர்.
SUNDARNov 30, 2022 - 07:28:48 AM | Posted IP 162.1*****