» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடும்ப பிரச்சனை: 2பேர் தூக்கிட்டுத் தற்கொலை!

செவ்வாய் 29, நவம்பர் 2022 10:39:14 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் குடும்ப பிரச்சனை காரணமாக 2பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். 

தூத்துக்குடி தஸ்நேவிஸ் நகரைச் சேர்ந்தவர் சுடலை மகன் மாடசாமி (50). கூலித் தொழிலாளியான் இவர் நேற்று மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் பன்னீர் செல்வம் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமண ஏக்கத்தில் தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு கோட்டை பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் தூண்டல்முத்து  மகன் பேச்சிமுத்து (28), ஊறுகாய் வியபாரம் செய்து வந்தார். இவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் ஏற்பாடு செய்யவில்லையாம். இதனால் மனமுடைந்த பேச்சுமுத்து நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இனஸ்பெக்டர் (பொ) பத்மாவதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory