» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை

செவ்வாய் 29, நவம்பர் 2022 8:24:44 AM (IST)

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு கனமழையாக பெய்தது. மேலும் இன்று காலையிலும் தொடர்ந்த மழை பெய்தது. இதைத் தொடர்ந்து மாணவர்களின் நலன்கருதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று  (29.11.22) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மழை காரணமாக தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையம் சேறும் சகதியுமாக மாறியது. இதேபோல் கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம், சாத்தான்குளம், திருச்செந்தூர்  உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 


மக்கள் கருத்து

தலைவலிNov 29, 2022 - 07:39:43 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி தற்காலிக பஸ் நிலையம் சேறும் சகதியுமாக தொடர்ந்து கொண்டே இருக்கும்

MakkalNov 29, 2022 - 10:18:37 AM | Posted IP 162.1*****

Too Late announcement

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory