» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து சேவை துவக்கம்: பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்பு!
வியாழன் 24, நவம்பர் 2022 11:56:31 AM (IST)

கோவில்பட்டியில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வரை வந்து செல்லும் புதிய பேருந்து சேவையை எம்.சி.சண்முகையா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சங்கம்பட்டி வரை வந்து சென்று கொண்டிருந்த பேருந்தை வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வரை இயக்க வேண்டும் என மணியாச்சி கிராம சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மக்களி்ன் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி கோட்ட மேலாளர் அழகிரிசாமி கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் ஜெகநாதன், கோவில்பட்டி தொமுச செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி, மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா, அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அய்யாதுரை, மணியாச்சி கிளை செயலாளர்கள் தம்பான், ரத்தினவேல், மணியாச்சி கிளை பிரதிநிதிகள் பேச்சிபாண்டி, குமார், அய்யாத்துரை பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அக்.5ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 12:37:35 PM (IST)

காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பில் முப்பெரும் விழா: நலதிட்ட உதவிகள் வழங்கல்!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 12:22:59 PM (IST)

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் 3 பைக் திருட்டு : வாலிபர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:12:06 AM (IST)

கார் மோதி முதியவர் பலி: டிரைவர் கைது
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:05:01 AM (IST)

தூத்துக்குடியில் காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:41:27 AM (IST)

தமிழ்நாட்டில் அனைத்து அதிகாரங்களும் ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ளது: கிருஷ்ணசாமி
செவ்வாய் 3, அக்டோபர் 2023 10:15:10 AM (IST)
