» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
படகில் இருந்து கடலுக்குள் தவறிவிழுந்த மீனவர் உயிரிழப்பு - தூத்துக்குடியில் பரிதாபம்!
வியாழன் 24, நவம்பர் 2022 11:31:43 AM (IST)
தூத்துக்குடியில் படகில் இருந்து கடலுக்குள் தவறிவிழுந்து காயம் அடைந்த மீனவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணிச்சாமி மகன் தோமஸ் (56), மீனவரான இவர் நேற்று காலை சக மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு திரேஸ்புரம் மீன்பிடி இறங்குதளத்தில் மீன்களை இறக்கி கொண்டிருக்கும்போது படகிலிருந்து நிலை தடுமாறி கடலுக்குள் தவறி விழுந்தார்.
சக மீனவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கிசிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இது சம்பந்தமாக தருவைக்குளம் கடல் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகரில் நவ.30ம் தேதி மின்தடை!
செவ்வாய் 28, நவம்பர் 2023 10:00:50 PM (IST)

அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பசுமாடு பலி!
செவ்வாய் 28, நவம்பர் 2023 9:37:13 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த ரவுடி கைது!
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:50:54 PM (IST)

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறுதானிய, பாரம்பரிய உணவு திருவிழா!
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:18:25 PM (IST)

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள்: அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 8:10:47 PM (IST)

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் சர்வதேச மகளிருக்கு எதிரான வன்கொடுமை தினம்!
செவ்வாய் 28, நவம்பர் 2023 4:34:03 PM (IST)
