» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தந்தை திட்டியதால் பிளஸ் 2 மாணவர் திடீர் மாயம்!

சனி 24, செப்டம்பர் 2022 12:21:41 PM (IST)

தூத்துக்குடி அருகே சரியாக படிக்காததால் தந்தை திட்டியதால் பிளஸ் 2 மாணவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த  17 வயது மாணவர் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கு சரியாக படிப்பு வராததால் தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவர் கடந்த 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. 

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மற்றொரு  மாணவர் மாயம்!

இதுபோல் செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவர், அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 22ஆம் தேதி ஜிம்முக்கு சென்று விளையாடிவிட்டு வருவதாக வீட்டில் கூறி  சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory