» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிவஞானபுரம் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல்!

சனி 24, செப்டம்பர் 2022 11:50:20 AM (IST)


சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை  மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 95-மாணவ- மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை  மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், சின்னமாரி முத்து, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா, திமுக நிர்வாகிகள் ஆதிசங்கர்,  காளிராஜ், பாண்டியன், ராகவன், ராஜேந்திரன், ராஜபாண்டி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory