» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
புதன் 17, ஆகஸ்ட் 2022 3:18:22 PM (IST)
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அதிமுக பொதுக் கூட்டம் செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் அருகில், பழைய மாநகராட்சி அலுவலகம், குரூஸ் பர்னாந்து சிலை உள்ளிட்ட பல பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சிகளில் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, வடக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் மாடசாமி, தருவைகுளம் கிளை அவைத் தலைவர் செல்லதுரை, பழனிச்சாமி பாண்டியன், பழனி முருகன், ஸ்ரீவைகுண்டம் செல்லதுரை, அப்துல் ஹாசன், தர்மராஜ், லோகு கணேஷ், மகேஸ்வரன், மட்டக்கடை குலாம், ரவிக்குமார், மணிகண்டன், கிஷோர் குமார், ஜெயபால், காமாட்சி, அந்தோணி செல்வராஜ், தருவைகுளம் ராஜா, அஸ்வின் முரளி, மாரியப்பன், சுனாமி காலனி சுதாகர், ரமேஷ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அசோகன், தர்மராஜ், பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
எம்ஜிஆர் ரசிகர்Aug 17, 2022 - 04:06:29 PM | Posted IP 162.1*****
கூட்டமே இல்லையே?ஆள் இல்லாத டீ கடைதான் அதிமுகவிற்கு மூடுவிழாதான் .....
ராமநாதபூபதிAug 18, 2022 - 02:34:43 PM | Posted IP 162.1*****