» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி : நண்பர் படுகாயம்!

புதன் 17, ஆகஸ்ட் 2022 3:11:00 PM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி முனிசாமிபுரம் 2வது தெருவை சேர்ந்தவர்  மந்திரமூர்த்தி மகன்  விஜய் (22). பக்கிள்புரம் 2வது தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் அஜித்குமார் (21) நண்பர்களான இவர்கள் இன்று காலை தூத்துக்குடி போல்டன்புரம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். 

இதில் விஜய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த அஜித்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த விஜயின் உடலை கைப்பற்றி பிரேத பரிேசாதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory