» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண்ணை கழுத்தறுத்து கொன்று நகைகள் கொள்ளை : மர்ம நபர்கள் வெறிச்செயல்!
புதன் 17, ஆகஸ்ட் 2022 11:26:44 AM (IST)
உடன்குடியில் பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்து, நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவருடைய மனைவி சுயம்புகனி (55). இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே சென்னையில் வசித்து வருகின்றனர். சுயம்பு தைக்காவூரில் தங்கியிருந்து பனை ஏறும் தொழில் செய்து வருகிறார். வாரத்தில் ஒருநாள் மட்டும் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று அவரது வீட்டில இருந்து துர்நாற்றம் வீசியது.
இகுறித்து அக்கம் பக்கத்தினர் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது சுயம்புகனி இறந்து கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது, மேலும் அவர் அணிந்திருந்த 1 பவுன் செயின், மற்றும் கவரிங் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. நகைக்காக மர்ம நபர்கள் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மர்ம நபர்கள்Aug 19, 2022 - 02:54:56 PM | Posted IP 162.1*****
மரியாதையா சொல்லு மேன். வெறிச்செயல் கிரிசெயல் ன்னுட்டு.
மர்ம நபர்கள்Aug 19, 2022 - 02:55:51 PM | Posted IP 162.1*****