» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

புதன் 17, ஆகஸ்ட் 2022 11:17:02 AM (IST)

தூத்துக்குடியில் குடும்பத் தகரறாில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி கணேசபுரத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் மகேஷ் (45), கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத் தகராறில் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டாராம். இதனால் மனவேதனையில் இருந்த மகேஷ் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர்  ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

பள்ளி மாணவி தற்கொலை!

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயுள்ள நாக கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமர குருபரன். இவரது மகள் வீரலட்சுமி (16), அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று முன்தினம் அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்  (பொ) மணிவண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory