» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒர்க்ஷாப் பூட்டை உடைத்து கார் பேட்டரிகள் திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
புதன் 17, ஆகஸ்ட் 2022 11:08:54 AM (IST)
சாத்தான்குளம் அருகே ஒர்க்ஷாப் பூட்டை உடைத்து காரில் பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள இட்டமொழியைச் சேர்ந்தவர் அய்யாகன்னு மகன் மணிகண்டன் (53). இவர் அப்பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்ஷாப் நடத்தி வருகிறார்.
கடந்த 13ம் தேதி இரவு மர்ம நபர்கள் இவரது ஒர்க்ஷாப்பின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு பழுது பார்ப்பதற்காக நிறுத்தியிருந்த காரில் இருந்து 4 பேட்டரிகள், மற்றும் ஜாக்கி ஆகியவற்றை திருடிச் சென்று விட்டார்களாம். இதன் மதிப்பு ரூ.1லட்சத்து 96ஆயிரம் ஆகும். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.