» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒர்க்ஷாப் பூட்டை உடைத்து கார் பேட்டரிகள் திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

புதன் 17, ஆகஸ்ட் 2022 11:08:54 AM (IST)

சாத்தான்குளம் அருகே ஒர்க்ஷாப் பூட்டை உடைத்து காரில் பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள இட்டமொழியைச் சேர்ந்தவர் அய்யாகன்னு மகன் மணிகண்டன் (53). இவர் அப்பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்ஷாப் நடத்தி வருகிறார். 

கடந்த 13ம் தேதி இரவு மர்ம நபர்கள் இவரது ஒர்க்ஷாப்பின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு பழுது பார்ப்பதற்காக நிறுத்தியிருந்த காரில் இருந்து 4 பேட்டரிகள், மற்றும் ஜாக்கி ஆகியவற்றை திருடிச் சென்று விட்டார்களாம். இதன் மதிப்பு ரூ.1லட்சத்து 96ஆயிரம் ஆகும். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory